செவ்வாய், 12 ஜனவரி, 2010

போக்குவரத்துப் பிரச்சனையால் தமிழ்ப்பள்ளி மூடப்படுமா?

தேசிய தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையாரும் தேசிய தலைவரின் மனைவி மதிவதனியின் தாயாரும் அவர்கள் விரும்பினால் இந்தியா செல்லலாம் என்று அரச தலைவர் மகிந்த ராசபக்ச தெரிவித்துள்ளார்.
12 January 2010
அயர்லாந்தின் தலைநகர் டப்ளினிலுள்ள திருத்துவக் கல்லூரியில் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை சிறிலங்காவின் போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான நிரந்தர மக்கள் நீதிமன்ற அமர்வொன்று இடம்பெறவுள்ளது.
12 January 2010
முன்னாள் போராளிகளை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைப்பதாக வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் மகிந்த விடுத்த அறிவிப்பை அடுத்து, அன்றைய கூட்டத்தில்வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பல முன்னாள் போராளிகள் மீண்டும் சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினரால் பிடித்து செல்லப்பட்டுள்ளனர்.
12 January 2010
பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் போக்குவரத்து பேரூந்து பிரச்சனை காரணமாக கோலமூடா கோம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
12 January 2010
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அம்பலப்படுத்துதுமாறு கோரி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது. ஜாதிக ஹெல உறுமயவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பிலுள்ள விகாரமாதேவி பூங்காவில் இன்று பிற்பகல் 02.30 அளவில்ஆரம்பிக்கப்பட்டது.
12 January 2010
மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தால் கேட்கப்படும் கேள்விக்கு ஒளிவு மறைவின்றி பதிலளிக்கப்படும் என பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
12 January 2010
இங்குள்ள 'அகத்தியன் ஷெல்டர்' ஆசிரமத்தில் உள்ள மூன்று தமிழ்ச் சிறுவர்களுக்குப் பிறப்புப் பத்திரம் இல்லாத காரணத்தால் எந்தப் பள்ளிக்கூடமும் இடம்கொடுக்க மறுக்கிறது. என்று அகத்தியன் ஷெல்டர் ஆசிரமத்தின் பொறுப்பாளர் பி.சிவபாலன் முறையிட்டார்.
12 January 2010
சோகங்கள், இழப்புக்களென பலவகையான வலிகளை அனுபவித்த எமக்கு வீரத்தந்தை எமது தேசிய தலைவரை எமக்களித்த எமது தலைவரின் தந்தையின் இழப்பு மிகப்பெரும் இழப்பாக தமிழீழ மக்களால் அனுபவிக்கப்பட்டது. தமிழினத்துக்காக எமக்காக நாம் தலைநிமிர்ந்து உலகத்தில் தமிழன் என உரத்துக் குரல்கொடுக்கவும் அதை உலகம் கேட்கவும் எம்மை
12 January 2010
தம்மை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளில் 8 பேர் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
12 January 2010
இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்றமைக்காக 05 இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டள்ளார்கள். இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
12 January 2010
நடைபெறப்போகும் அதிர் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறுகின்றது. இதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக  தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
12 January 2010
இலங்கையில் அமைதியும், சமாதானமும், சமரசமும், இணக்க நிலையும் நிலவவேண்டுமானால்  இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு ஒன்று காணப்பட வேண்டுமானால்  இனக் குரோதமும், பேரினவாதமும் ஒழிந்து, இன சௌஜன் யமும், நல்லிணக்கமும், புரிந்துணர்வும் மலரவேண்டும்.
12 January 2010
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். அப்படி நம்மைச் சிரிக்கவைப்பவர் எஸ்.வி.சேகர். 2 நாளுக்குமுன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அவருடனும் புலவர் புலமைப்பித்தனுடனும் கலந்துகொண்டேன். தமிழக முதல்வர் கருணாநிதி நடத்தப்போகும் செம்மொழி மாநாட்டைப் பற்றிய விவாதம் என்பதால், எடுத்த எடுப்பிலேயே விவாதத்தில் சூடு பறந்தது.
12 January 2010
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பேராதனைப் பல்கலைக்கழக மாணவி துவாரகாவை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரத்தன  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
12 January 2010
"சண்டேலீடர்" பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு ஜனவரி 8ஆம் திகதி யுடன் ஓராண்டு பூர்த்தியாகி விட்டது. 23வழக்குத் தவணைகளும் வந்து போய்விட்டன. ஆனால் பிரதான சந்தேக நபர் என்று எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
12 January 2010
வெளிநாட்டுக்கு தப்பியோடிய சிறிலங்காவின் பிரபல பாதாளஉலக கும்பல் தலைவனான குடு லாலை நாடு திரும்புமாறு அரச தலைவர் மகிந்த தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார் என்று அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
11 January 2010
"கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதம் தற்போது இல்லை. எனினும் மீண்டும் ஆயுதக் கலாசாரம் தலைதூக்காது மக்கள் செயல்பட வேண்டும்" என்று நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மகிந்த ராசபக்ச கேட்டுக் கொண்டார்.
மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சுமார் 12 நிமிடங்கள் தமிழிலும், சிங்களத்திலும் இவர் உரையாற்றினார். மக்கள் பிரச்சினை சம்மந்தமாகவோ அரசியல் தொடர்பாகவோ எதுவும் பேசாத மகிந்த பொதுவாக உரையாற்றினார்.
குறிப்பாக யுத்தத்தினால் குடும்பங்களைப் பிரிந்து வாழ்பவர்களையும், யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்ட பெண்களையும் சமூகமயமாக்கும் பொருட்டு விசேட வேலைத் திட்டமொன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டுமே அவர் தெரிவித்தார்.
கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதம் தற்போது இல்லை என்று தனது உரையில் குறிப்பிட்ட மகிந்த நாட்டில் மீண்டும் ஆயுதக் கலாசாரம் தலைதூக்காது மக்கள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஒட்டுக்குழுக்களின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன்,
கிழக்கு மாகாண சபை செயல்படுவதில் தற்போது நிர்வாக ரீதியான பிரச்சினைகள் எதிர்நோக்குவதால் எதிர்வரும் பதவிக் காலத்தில் அப்படியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சிறிலங்காவின் அமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளீதரன், ஏ.எல். அதாவுல்லா, எஸ்.எச்.அமீர் அலி உட்பட பலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதன் பின் காத்தான்குடிக்கு விஜயம் செய்த மகிந்த அங்கு பள்ளிவாசல் ஒன்றுக்கான வேலைகளையும் ஆரம்பித்து வைத்தார்.  தமிழினத்துக்கு துரோகம் செய்த ஒட்டுக்குழுக்களின் தலைவர்கள் மகிந்தவிற்கு அருகில் இருந்து எம்மை அழித்தது மட்டுமல்லாது அதை கைதட்டி சிரித்து மகிழ்வதாகவும் இந்நிகழ்ச்சியின் மூலம் தென்படுகிறது.
11 January 2010
சிறிலங்கா அரச படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை விடுதலை செய்ய முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
11 January 2010
சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்காக விநியோகிக்கப்பட்டு வரும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் பல்வேறு குறைபாடுகள் தென்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு விநியோகிக்கப்பட்டுள்ள வாக்காளர் அட்டைகளில் தேசிய அடையாள அட்டை இலக்கம்
11 January 2010
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு பிணை வழங்குவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. 50ஆயிரம் ரொக்கம் மற்றும் அவரது கடவுச்சீட்டு ஆகியவற்றை பிணையாக வைக்கவேண்டும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
11 January 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக