வியாழன், 31 டிசம்பர், 2009

கிழக்கு கடலில் மீன்பிடி தடை நீக்கம்

கிழக்கு மாகாண கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு சிறிலங்கா அரசால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

31 December 2009

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தமை போன்று ஊர்காவல் படை வீரர்கள் நிதியத்திலிருந்து அதிபர் தேர்தலுக்காக எவ்வித நிதியும் செலவு செய்யப்படவில்லையென ஊர்காவல் படை பணிப்பாளர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

31 December 2009

கனடாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக ஈழத்தமிழரான செல்வி ராதிகா சிற்சபேசன் தெரிவாகியுள்ளார்.

30 December 2009

கொழும்பின் புறநகர் சிலாபத்தின் சுதுவெல தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் கித்சிறி ராஜபக்ச இன்று கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 December 2009

தமிழீழ விடுதலைப்புலிகளின் 600 வங்கிக் கணக்குகளைப் பெற வேண்டுமானால், ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழ்கின்ற பொன்னையா ஆனந்தராஜா என்பரை கைது செய்ய வேண்டும் என சிங்கப்பூரைத் தளமாக கொண்டியங்கும் பயங்கரவாத நிபுணர்கள் குழுவின் தலைவர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

30 December 2009

இலங்கையில் தமிழர் நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது. தமிழகம் ஓரணியில் திரண்டு தனது எதிர்ப்பைத்

தெரிவிக்கவில்லை. சிங்கள இனவெறிப் பாசிசக் கொடுங்கோலாட்சி நடத்தும் மகிந்த அரசு உலகளாவிய

மனித உரிமைகளைத் துணிந்து நசுக்குகிறது. தமிழர்களுக்குத் தமிழர்கள் என்ற உணர்வு வராத நிலையில்

உலகம் நம்மை எப்படித் திரும்பிப் பார்க்கும்?

30 December 2009

உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளான மக்கள் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத இடங்களிலேயே குடியமர்த்தப்பட்டு வருவதாக எதிர்கட்சிப் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

30 December 2009

அரச அதிபர் தேர்தலின் போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

30 December 2009

சிறிலங்கா கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சிகளை வழங்குவது குறித்து இரு நாடுகளும் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சிறிலங்காவிற்கான இந்திய தூதுவர் அசோக் கே காந்திற்கும் சிறிலங்கா கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் திஸ்சேர சமரசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

30 December 2009

வன்னியில் இருந்து சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு காரணமாக இடம்பெயர்ந்து தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏதிலிகளை மீளக் குடியமர்த்த எது வித காலக்குகெடுக்களும் இல்லை என சிறீலங்காவின் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் மகிந்த சமர சிங்க தெரிவித்துள்ளதாக சிறீலங்காவின் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

30 December 2009

அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான றோம் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்து இட்டிருக்கவில்லை. ஆனாலும், போர்க் குற்றங்கள் தொடர்பாக இந்த நீதிமன்றத்தின் முன்பாக இலங்கை நிறுத்தப்படக்கூடிய சாத்தியம் உள்ளது என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கின்றார்.

30 December 2009

கத்திஎடுத்ததும்

குண்டு பதித்ததும் வரலாறு;

குழந்தை கொன்றதும்

குடி அறுந்ததும் வரலாறு;

30 December 2009

மருதானை சுதுவெல்ல பகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் கீத்சிறி ராஜபக்ஸவை இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுள்ளதாக மருதானை பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

30 December 2009

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

30 December 2009

சிறிலங்காவுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க நினைப்பவர்கள் மகிந்த ராஜபக்சே அவர்களுக்கே வாக்களிக்கவேண்டும் என நீர் விநியோக மற்றும் நீரியல் வள அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார்.

30 December 2009

சிறிலங்காவிற்குள் இடம்பெயர்ந்த மக்களின் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நடைபெறப்போகும் அதிபர் தேர்தலில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

30 December 2009

வன்னி இறுதிப் போரின் பின்னர், நிவாரணக் கிராமம் என்று அழைக் கப்படும் வவுனியா வதை முகாம்களில் தங்கியிருந்த வேளை விசாரணைக்கெனப் படையினரால் கூட்டிச்செல்லப்பட்டவர்களில் 738 பேர் இன்னும் சில நாள்களில் விடுவிக்கப்படுவர் என சட்டமா அதிபர் மொகான் பீரீஸ் தெரிவித்துள்ளார்.

29 December 2009

நடைபெறவுள்ள அரச அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அமெரிக்க அரசாங்கமே வழிநடத்துவதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

29 December 2009

சுமார் 20 வருடங்களின் பின்பு யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்குமிடையில் இ.போ.ச. பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இ.போ.ச. டிப்போக்கள் இணைந்து தினமும் குறித்த பேருந்து சேவையை நடத்தி வருகின்றன.

29 December 2009

அரச அதிபர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக யாழ்தேவி புகையிரத சேவையை ஓமந்தை வரையான குறுகிய தூரத்துக்கு நீடிக்கவிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

29 December 2009

மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக