போதைப்பொருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போதைப்பொருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

ஹெரோயின் போதைப்பொருள் கடத்த முயன்ற இலங்கைப் பிரஜை கைது

சுமார் 90 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் சென்னையிலிருந்து வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் சென்னையில் இருந்து வந்த இலங்கைப் பிரஜையான சந்தேகநபர் நேற்றிரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டதாக விமானநிலைய சுங்கப்பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோ 350 கிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோய்ன் கோதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விமானநிலைய சுங்கப்பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபரின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்கப்பிரிவினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Content of Popup