புதன், 25 ஜூலை, 2012

ஈழத்தமிழர்கள் ஆபத்துக்கள் நிறைந்த படகுப்பயணத்தை மேற்கொள்வதன் பின்னணி என்ன?


ஈழத்தமிழர்கள் ஆபத்துக்கள் நிறைந்த படகுப்பயணத்தை மேற்கொள்வதன் பின்னணி என்ன?

சிறிலங்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ் மக்களே அதிகம் செல்கின்றனர். இதுவரை, சிறிலங்காவைச் சேர்ந்த 1541 புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட தற்போது 700 பேர் அதிகம் பயணமாகியுள்ளனர்.
தயவுசெய்து தேர்தலுக்கு முன் எம்மை மீள்குடியேற்றவும் – சம்பூர் மக்கள்

தயவுசெய்து தேர்தலுக்கு முன் எம்மை மீள்குடியேற்றவும் – சம்பூர் மக்கள்

திருகோணமலை – சம்பூர் பகுதியிலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்னர் மோதல்களின்போது இடம்பெயர்ந்த மக்கள் தம்மை எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆஸிக்கு புகலிடம் கோரிச் சென்ற ஈழ கர்ப்பிணிப் பெண் வைத்தியசாலையில் அனுமதி

ஆஸிக்கு புகலிடம் கோரிச் சென்ற ஈழ கர்ப்பிணிப் பெண் வைத்தியசாலையில் அனுமதி

புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட 141 பேருடன் நேற்று (22) கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்த படகில் இருந்த கர்ப்பிணிப் பெண் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய திருநெல்வேலித் தாக்குதல்

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய திருநெல்வேலித் தாக்குதல்

 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பலரும் பங்கேற்ற தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய திருநெல்வேலித் தாக்குதல் நடாத்தப்பட்டு 29 ஆண்டுகள்  நிறைவடைந்தது.
மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் நினைவு நாள் (23-07-1983)

மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் நினைவு நாள் (23-07-1983)

23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி – கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு. சதாசிவம் செல்வநாயகம் கல்வியங்காடு, யாழ்ப்பாணம் . 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா அழுத்தம்

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா அழுத்தம்

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில், பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளது.

தமிழ்நாடு

தனி ஈழம் வேண்டுமென்பதை எங்களுடைய குறிக்கோளாக வைத்திருக்கிறோம்: மு.கருணாநிதி

தனி ஈழம் வேண்டுமென்பதை எங்களுடைய குறிக்கோளாக வைத்திருக்கிறோம்: மு.கருணாநிதி

இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கி வரும் விவகாரம் தொடர்பாக டெசோ மாநாட்டில் தீவிரமான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
மத்திய அரசு தலையிடாதவரை தமிழக மீனவர்களுக்கு விமோச்சனம் இல்லை… ஜெ. காட்டம்

மத்திய அரசு தலையிடாதவரை தமிழக மீனவர்களுக்கு விமோச்சனம் இல்லை… ஜெ. காட்டம்

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதல், பிடித்துச் செல்லுதல் போன்றவற்றைத் தடுக்க இந்திய அரசாங்கம், இந்த பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் மாதங்களில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்க வாய்ப்புள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த பிரச்சினையில் தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு உளவுப்பிரிவின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு கொல்கத்தா சென்ற சிறிலங்கா படையினர்

தமிழ்நாடு உளவுப்பிரிவின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு கொல்கத்தா சென்ற சிறிலங்கா படையினர்

இந்தியாவுக்குள் நுழையும் சிறிலங்காப் படையினரைக் கண்காணிக்க, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவினரும், கியூ பிரிவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தனுஸ்கோடி அருகே நடுக்கடலில் சிறிலங்காவின் புதிய கடற்படைத்தளம்

தனுஸ்கோடி அருகே நடுக்கடலில் சிறிலங்காவின் புதிய கடற்படைத்தளம்

இந்திய – சிறிலங்கா கடல் எல்லையில், தமிழ்நாட்டின் தனுஸ்கோடிக்கு அருகே 7வது மணல் திட்டில் சிறிலங்கா கடற்படை புதிய முகாம் ஒன்றை நிறுவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு நதியின் மரணம் – தாமிரபரணி படுகொலை காட்சிகள் ஆவணம்

ஒரு நதியின் மரணம் – தாமிரபரணி படுகொலை காட்சிகள் ஆவணம்

1999 ஆம் ஆண்டு சூலை 23 அன்று திருநெல்வேலியில் கூலி உயர்வுக்காக போராடிய 17 தமிழ் உறவுகள் தாமிரபரணி ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நாள். இப்படுகொலை தொடர்பாக நெல்லை காஞ்சனை சினிமா இயக்கம் எடுத்த ஆவணப்படத்தை இங்கே வெளியிட்டுள்ளோம்
கிடப்பது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில் வை…!

கிடப்பது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில் வை…!

கிடப்பது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில் வை என்ற பழமொழியை மத்திய அரசு அட்டகாசமாக பின்பற்றி வருவதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில், சிங்கள படையினருக்குப் பயிற்சி தருவதற்கு அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், மக்களும் கூட கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் தெரிவித்து வரும் நிலையில் அதை சற்றும் பொருட்படுத்தாமல், சிங்களப் படையினருக்குத் தொடர்ந்து பயிற்சியளித்து வருகிறது மத்திய அரசு. தற்போது புதிதாக 4 சிங்கள விமானப்படையினர் மேற்கு வங்கத்திற்குப் பயிற்சிக்காகப் போயுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக