ஞாயிறு, 18 டிசம்பர், 2011

ஐ.தே.க தலைமை பதவிக்கு நாளை தேர்தல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை நிர்ணயிப்பது குறித்த தீர்மானமிக்க வாக்கெடுப்பு நாளை திங்கட்கிழமை (19.12.2011) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளை கட்சித் தலைமைப் பதவி உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்காக தற்போதைய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், கட்சியின் இணைப் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவும் போட்டியிடவுள்ளனர்.

இதுதவிர, கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்காக கட்சியின் தற்போதைய தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க மற்றும் தற்போதைய இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் போட்டியிடுவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் செயற்குழு உறுப்பினர் தயா கமகே ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இதேவேளை, கட்சியின் தவிசாளர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான வெற்றிடங்கள் போட்டியின்றி தீர்மானிக்கப்பட்டுள்ளதாககட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்சியின் தவிசாளராக காமினி ஜயவிக்ரம பெரேராவும், துணைத் தலைவராக ஜோசப் மைக்கல் பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டால் கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்தும் திஸ்ஸ அத்தநாயக்க செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Content of Popup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக