ஞாயிறு, 24 ஜூலை, 2011

தேர்தல் தொடர்பில் அரசின் மீது குற்றம் சொல்கிறது ஐ.தே.க

65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நேற்றைய தினம் சுதந்நதிரமாக நடைபெறவில்லை என ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும், தேசிய ஊடகம் மட்டுமல்ல தேசிய வளங்கள் மற்றும் சில தேசிய நிறுவனங்கள் கூட இலங்கை அரசின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இதேவேளை, வராலாற்றில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தீங்காக இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டதாகவும் ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இந்நிலையில், ஜனநாயகம் கருதி தமது கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் ஐக்கிய தேசிய கட்சி நன்றிகளை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக