திங்கள், 18 ஜூலை, 2011

சவாலான ரோலில் நடிக்க விரும்பும் ஜனனி ஐயர்

இயக்குனர் பாலாவின் 'அவன் இவன்' படத்தில் பெண் பொலிஸ் பேபிமாவாக ஜனனி அய்யர் நடித்துள்ளார், இதற்காக கோலிவுட்டே ஜனனியை உச்சி மோந்து பாராட்டியதாம்.

த்ரிஷா மாதிரி தமிழ் பேசி நடிக்கும் நடிகையாக கோலிவுட்டில் வலம் வருவதை எண்ணி பெருமையடைகிறாராம் ஜனனி.

"அவன் இவன்" படத்தில் என்னோட கதாபாத்திரத்தை பற்றி மட்டும் இயக்குனர் பாலா சார் சொல்லியிருக்கிறார்.

என் நடிப்பு பற்றி மனம் விட்டு அவர் பாராட்டியுள்ளார். மற்றபடி, அவர் எனக்கு அறிவுரை எதுவும் சொன்னதில்லை.

நான் நடிக்கும் இரண்டாவது படத்தில் வேறு பரிமாணத்தில் என்னுடைய நடிப்பை பார்க்கலாம்.

சவாலான கதாபாத்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கேன் என்று தெரிவித்துள்ளார் ஜனனி ஐயர்.

”அவன் இவன்” படத்தை பார்த்து தனது நடிப்பை பாராட்டியவர்களுக்கு ஜனனி மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக