செவ்வாய், 19 ஜூலை, 2011

கரண் தான் எனக்கு பொருத்தமான ஜோடி: நடிகை அஞ்சலி

நடிகர் கரண் தான் எனக்கு பொருத்தமான ஜோடி என்றும், அவருக்கும், எனக்கும் ஜோடி பொருத்தம் கச்சிதமாக இருக்கிறது என்றும் நடிகை அஞ்சலி தெரிவித்தார்.

கரண் - அஞ்சலி ஜோடியாக நடித்திருக்கம் படம் ”தம்பி வெட்டோத்தி சுந்தரம்”.

நாகர்கோவில் அருகே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்தை இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்கியிருக்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் ”தம்பி வெட்டோத்தி சுந்தரம்” படக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது நடிகை அஞ்சலி கூறுகையில், ”தம்பி வெட்டோத்தி சுந்தரம்” படத்தில் கரணுக்கு ஜோடியாக என்னை நடிக்க அழைத்தபோது, அவர் ஒரு மூத்த நடிகர் என்பதால், எப்படி பழகுவாரோ என்று கொஞ்சம் பயந்தேன். ஆனால், நான் பயந்தது போல் அவர் இல்லை.

எனக்கு சவுகரியமான கதாநாயகனாக இருந்தார். எனக்கும், அவருக்கும் ஜோடிப் பொருத்தம் கச்சிதமாக இருக்கிறது. குறிப்பாக, இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ”கொலைகாரா” என்ற பாடல் காட்சியில், எங்கள் இருவரின் கூட்டணி, படம் பார்க்கும் எல்லோருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகர் கரண் பேசும் போது, ”தம்பி வெட்டோத்தி சுந்தரம்” படத்தை பார்த்தபின், அந்த படத்தை மறக்க முடியாது. 4 நாட்களுக்கு மனசுக்குள்ளேயே நிற்கும். அப்படி ஒரு பாதிப்பை படம் ஏற்படுத்தும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக