திங்கள், 18 ஜூலை, 2011

நட்சத்திராவை கண்டு பயந்த டூ பட நாயகன்

"முன்தினம் பார்த்தேனே" படத்தில் நடித்த நாயகன் சஞ்சய் ஹொலிவுட்டின் புதுமுக நாயகி நட்சத்ரா இருவரையும் இணைத்து ''டூ' படத்தில் நடித்துள்ளனர். 

இப் படத்தை இயக்குனர் ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கியுள்ளார்.

இயல்பாகவே கலகலப்பாக பழகக்கூடிய நபர்தான் இப்படத்தின் இயக்குனர்.

சீரியசான காட்சியை எங்களுக்கு விவரித்து விட்டு கடைசியில் கொமெடியை சொல்லி சிரிக்க வைத்துவிடுவார்.

அந்த சீரியஸ்நெஸ் மறந்து போகும், பின்னர் காட்சியுடன் இயல்பாக ஒன்றி நடித்து விடுவோம்.

படக்குழுவின் கடின உழைப்பால் படப்பிடிப்பு 45 நாட்களில் முடிந்தது.

படப்பிடிப்பில் நாயகி நட்சத்ராவை பார்த்த போது பழம்பெரும் நடிகை சுமித்ராவின் மகள் நம்மிடம் எப்படி பழுகுவாரோ என்ற பயம் இருந்தது.

ஆனால் எந்த பந்தாவும் இல்லாமல் மிகவும் இயல்பாக என் கூட நடிச்சாங்க.

சினிமாவில் அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கு, என்று "டூ" படத்தின் படப்பிடிப்பில் நட்சத்திராவை கண்டு பயந்து, பழக தயங்கி நின்ற அனுபவத்தை நாயகன் சஞ்சய் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக