வெள்ளி, 22 ஜூலை, 2011

459 வாக்கு பெட்டிகளும் உரிய இடங்களை சென்றடைந்தன

தேர்தலுக்காக யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் அனைத்தும் உரிய இடங்களை சென்றடைந்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று காலை அனுப்பி வைக்கப்பட்ட 459 வாக்குப்பெட்டிகள் உரிய இடங்களை 12.55 மணியளவில் முழுமையாக சென்றடைந்துள்ளன என அவர் தெரவித்துள்ளார்.

இதேவேளை தீவகப்பகுதிகள் கடற்படையினரின் உதவியுடன் கொண்டு செல்லப்பட்ட வாக்குபெட்டிகள் வாக்களிப்பின் பின் விமானப்படையினரின் உதவியுடன் கெலிகொப்டர் மூலம் வாக்கு எண்ணப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக