வியாழன், 21 ஜூலை, 2011

தேர்தல் கடமையில் 25000 பொலிஸார்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் பாதுகாப்புச் சேவைக்கு 25 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் கடமைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார்.

இனிவரும் இரண்டு நாட்களில் தேர்தல் சட்டங்களை மீறி எவரேனும் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்தால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 114பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 78 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தேர்தல் சட்டங்களை மீறி பிரச்சாரத்துக்கு பயன்படுத்தபட்ட பஸ் மற்றும் வான் உட்பட 25 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக