புதன், 30 டிசம்பர், 2009

யாழ். இரவு நேர ஊரடங்கு நாளை முதல் நீக்கம்

நாளை நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ். குடாநாட்டில் அமுலிலுள்ள இரவு நேர ஊரடங்குச்சட்டம் நீக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.
30 December 2009
சிறிலங்காவுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க நினைப்பவர்கள் மகிந்த ராஜபக்சே அவர்களுக்கே வாக்களிக்கவேண்டும் என நீர் விநியோக மற்றும் நீரியல் வள அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார்.
30 December 2009
சிறிலங்காவிற்குள் இடம்பெயர்ந்த மக்களின் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நடைபெறப்போகும் அதிபர் தேர்தலில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
30 December 2009
வன்னி இறுதிப் போரின் பின்னர், நிவாரணக் கிராமம் என்று அழைக் கப்படும் வவுனியா வதை முகாம்களில் தங்கியிருந்த வேளை விசாரணைக்கெனப் படையினரால் கூட்டிச்செல்லப்பட்டவர்களில் 738 பேர் இன்னும் சில நாள்களில் விடுவிக்கப்படுவர் என சட்டமா அதிபர் மொகான் பீரீஸ் தெரிவித்துள்ளார்.
29 December 2009
நடைபெறவுள்ள அரச அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அமெரிக்க அரசாங்கமே வழிநடத்துவதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
29 December 2009
சுமார் 20 வருடங்களின் பின்பு யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்குமிடையில் இ.போ.ச. பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இ.போ.ச. டிப்போக்கள் இணைந்து தினமும் குறித்த பேருந்து சேவையை நடத்தி வருகின்றன.
29 December 2009
அரச அதிபர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக யாழ்தேவி புகையிரத சேவையை ஓமந்தை வரையான குறுகிய தூரத்துக்கு நீடிக்கவிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
29 December 2009
இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவர் மர்மான முறையில் உயிரழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
29 December 2009
சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கும் அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு விசேட புலனாய்பு பிரிவு ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
29 December 2009
சிறிலங்காவில் இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் பெற்றோலின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
29 December 2009
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே சிறிலங்காவின் பாரிய அடிப்படை மனித உரிமைகள் வன்முறையாளர் என த சிறிலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
29 December 2009
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களின் உடன் பிறந்த தம்பி பழ.கோமதிநாயகம் இன்று காலையில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நிலை சரியில்லாமல் காலமானார்.
29 December 2009
ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரெத்தின இதனை தெரிவித்துள்ளார்.
29 December 2009
நாட்டிற்கு சிறந்ததோர் தலைவர் இருக்கும் போது இன்னுமொருவரை தேடவேண்டிய அவசியம் சிறிலங்கா மக்களுக்கு இல்லையென  துரோகி கருணா தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே இவர் இதனை தெரிவித்துள்ளார்.
29 December 2009
மரண அச்சுறுத்தல்கள் தமக்கு புதிதல்ல எனத் தெரிவித்திருக்கும் அதிபர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, முன்னர் பயங்கரவாதிகளிடமிருந்து மரண அச்சுறுத்தல் வந்ததாகவும் தற்போது ஆளும் அரச தரப்பினரிடமிருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பதுளையில் இன்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது,
"இந்த நாட்டில் நிலவும் கையூட்டு மற்றும் ஊழல்களை ஒழித்தால் நான் அளித்துள்ள பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு உள்ளிட்ட வாக்குறுதிகளை விடவும் மேலதிகமான நன்மைகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியும்.
வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு மாதாந்தம் 2000 ரூபா கொடுப்பனவு வழங்கல், சமுர்த்தி கொடுப்பனவை உயர்த்துதல், போக்குவரத்துத் துறையுடன் தொடர்புபட்ட வாகன உதிரிப்பாக இறக்குமதிக்கான வரியினை இல்லாதொழித்தல், அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நான் வழங்கியுள்ளேன்.
இந்த வாக்குறுதிகளை விமர்சிக்கும் எதிரணியினர் இவற்றை எப்படி பொன்சேகா நிறைவெற்றப்போகிறார்? எனக் கேட்கின்றனர்.
இந்த நாட்டில் தற்போது தலைவிரித்தாடும் கையூட்டையும் ஊழலையும் ஒழித்தால் இவற்றை நிறைவேற்றுவது மிகவும் இலகுவான விடயமாக மாறிவிடும். அதைவிடவும் அதிகமான வேலைகளை நாட்டு மக்களுக்காக செய்ய முடியும்.
என்னுடன் இணைந்துள்ள ரணில் விக்கிரமசிங்க, அர்ஜூன ரணதுங்க ஆகியோர் எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளுமற்றவர்கள். அதனால் என்னுடன் இணைந்து ஊழலை ஒழிக்க புறப்பட்டுள்ளார்கள்.
எமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. மரண அச்சுறுத்தல்கள் ஒன்றும் எமக்குப் புதிதல்ல. ஏற்கனவே பயங்கரவாதிகள் எமக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார்கள். இன்று அரச தரப்பினர் மரண அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்" என்றார்.
இதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினரும் முன்னாள் இராணுவ வீரருமான கப்டன் மினிமல் முனசிங்க, சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக இக்கூட்டத்தில் அறிவித்தார்.
28 December 2009
நாட்டின் 75 வீதமான வளங்களை மகிந்த ராசபக்சவே நிர்வாகம் செய்து வருவதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ரத்நாயக்கத் தெரிவித்துள்ளார்.
28 December 2009
இந்தோனேசியாவில் உள்ள இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதற்கு, அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியும் ஆதரவு வழங்கவில்லை என இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
28 December 2009
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் விடுதி ஒன்றில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (27/12/2009 ) அன்று சந்தேகத்தின் பேரில் இராணுவப்புலனாய்வு பிரிவினரால் குடும்ப தலைவன் ஒருவர் கைது செயயப்பட்டுள்ளார்.
28 December 2009
தாயகத்தில் தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டுள்ள உறவுகளில் மனநலம் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு உதவியளிக்கும் நோக்குடன் ஆஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நேற்று நத்தார் தினத்தன்று மேற்கொண்ட அவசரகால உதவி நிவாரண நிதி சேகரிப்பு நிகழ்வில் 32 ஆயிரம் ஆஸ்திரேலிய டொலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
28 December 2009
வன்னிப்பகுதி பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிந்து பின்னர் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்து தற்போது வெளியேறியுள்ள தொண்டர் ஆசிரியர்கள் தமது தொடர்சேவையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
28 December 2009


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக