செவ்வாய், 17 நவம்பர், 2009

தழிழர்களை அடிமை கொள்ளுவதை நினைவூட்டும் புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் வெளியீடு!

ausi ship41 ஏதிலிகளுடன் வந்த படகு ஒன்றை ஆஸ்திரேலியக் கடற்படையினர் வடக்கு ஆஸ்திரேலியா அருகே அஷ்மோர் தீவு அருகே மடக்கி தடுத்து நிறுத்தியுள்ளனர். அனேகமாக இவர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
17 November 2009
lanka_1000_rs_2[படங்கள்] சிங்களவர்களால் தமிழர்கள் அடிமை கொள்ளப்பட்டதை நினைவுகூரும் முகமாக சிறீலங்கா மத்திய வங்கியினால் புதிய 1000 ரூபா தாள் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
17 November 2009
poralai_protest_s[படங்கள்] கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் சிங்கள கைதிகளால், தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் பொருட்டு ஜனநாயக மக்கள் முன்னணி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
17 November 2009
bombஅம்பாறையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
17 November 2009
vhp_praveen-togadiaஇலங்கை தமிழர் பிரச்சினைக்கு, ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை அமல்படுத்துவதுதான் ஒரே தீர்வாக இருக்கும் என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறினார்.
17 November 2009
laxman_yapa_abeywardenaசிறீலங்காவில் எதிர் வரும் நாட்களில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
17 November 2009
mortuary001வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியா மருத்துவமனையில் இறந்த வன்னி மக்களின் 76 உடல்கள் அரச செலவில் அடக்கம் செய்யப்படவுள்ளன.
17 November 2009
batti_fishermensமட்டக்களப்பில் மீன்பிடிப்பதற்குப் பயன்படுத்தும் கலங்களை இலங்கை மீன்பிடித் திணைக்களத்தில் பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
17 November 2009
john holmesஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும், அவசர நிவாரண சேவைகளின் இணைப்பாளருமான ஜோன் ஹோம்ஸ் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சிறீலங்கா வருகிறார்.
17 November 2009
divainaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் புதல்வர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை படுகொலை செய்யும் சதித்திட்டத்தில் தொடர்புபட்டிருப்பதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
17 November 2009
afp-logo-1"ஜெனரல் சரத் பொன்சேகாவால் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முடியுமானால், எதிர்காலத்தில் தேர்தலில் அவர் அரசுக்குக் கடும் சவாலாக விளங்குவார். ஜனாதிபதி, தேர்தல் குறித்த அறிவிப்பை அவர் ஞாயிறன்று வெளியிடாமைக்கு இதுவே காரணம்" என ஏ.எவ்.பி. கருத்துத் தெரிவித்துள்ளது.
17 November 2009
welikada_magazineவெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் நேற்று மேற்கொண்ட உண்ணாநிலைப் போராட்டத்தின் போது தமிழ் கைதிகளுக்கும் சிறைச்சாலை காவலர்களுக்கும் இடையில் கைகலப்பு இடம்பெற்றது.
17 November 2009
ar_murugadossஈழம் – மௌனத்தின் வலி என்ற புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் நக்கீரன் கோபால், டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், மிஷ்கின், நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். டைரக்டர் முருகதாஸ் பேச்சில் எக்கச்சக்க கோபமும், வேதனையும்…
17 November 2009
house_damagedவன்னியில் சொல்லொணாத் துயரங்களைச் சுமந்து வந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்கள் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு விடுதலையான மக்கள் இயல்பு வாழ்வில் ஈடுபட முடியாத வண்ணம் அவர்களைப் பின்தொடர்கிறது துயரம்.
17 November 2009
muslims jaffnaமீளவும் குடியமர யாழ்ப்பாணம் வந்துள்ள முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இடர்களையும் தமது மன அவசங்களையும்  தேவைகளையும்  அவர்களில் சிலர் இங்கு வெளிப்படுத்துகிறார்கள்.
17 November 2009
sarathகடந்தவாரம் வியாழக்கிழமை பாது காப்புப் படை அதிகாரிகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதியுடன் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளமாட்டார்.
17 November 2009
peoples_shoutingஒருவருக்குத் தீமையானது செய்யக் கூடாததைச் செய்வதாலும் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விடுவதாலும் ஏற்படும் இதனை ஆங்கிலத்தில் ( errors of Commission and omission ) என்பர்.
17 November 2009
sri lanka electionஇலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள இரு தேர்தல்களும் இலங்கை வரலாற்றில் மிக மோசமான தேர்தல்களாக அமையும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஜநயாக்கா தெரிவித்துள்ளார்.
17 November 2009
peoples_barbwireஎம்மையும் அழைத்துச் செல்வார்களோ என்ற அச்சத்துடன் நாம் ஏதிலி முகாம் மக்கள் கூட்டமைப்பு எம்.பிக்களிடம் தெரிவிப்பு
17 November 2009
s.p.tisanayakaஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி திஸநாயக்காவை அரசாங்க தரப்பில் இணையுமாறு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
17 November 2009


மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக