வியாழன், 19 நவம்பர், 2009

தமிழனுக்கு அகதி என்று பேர்!

barbwire_peoplesவீழ்ந்துகிடக்கும் பெருங்கனவாகக் கண் முன்னால் கிடக்கிறது வன்னிப் பெருநிலம். தமிழீழ நிலப்பரப்பு சூனியத்தால் சூழப்பட்டு இருக்கிறது. முள்வேலி முகாம்களுக்குள் மக்கள் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் சூழலில் இலங்கை முகாம் ஒன்றில் இருந்து தமிழகம் வந்திருக்கும் சிலரைச் சந்திக்க முடிந்தது. அவர்கள் சொல்லும் உண்மையின் வார்த்தைகள் இவை…
19 November 2009
landmine_removalமன்னார் பிரதேசத்தில் மாந்தை மேற்கு பகுதியில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர், தற்செயலாக கண்ணி வெடி வெடித்ததில் காயமடைந்து, மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
19 November 2009
mahinda_sarat'போரில் தோற்றவர்களைவிட வென்றவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்' என்பது புத்தனின் வாக்கு! தனது வலது பக்கத்தில் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவையும் இடது பக்கத்தில் பாதுகாப்புத் துறைச் செயலாளரும் தனது தம்பியுமான கோத்தபயவையும் வைத்துக்கொண்டு, ஈழத்தில் இரக்கமற்ற ரத்தக் கொடுமையை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே நடத்தி முடித்துவிட்டார்.
19 November 2009
salute_muththukkumarஈழத்தமிழனுக்கு மிகவும் பரிச்சயமான வார்த்தை 'வீர வணக்கம்'. ஈழத்தில் வீர மரணம் அதிகம். தாயககனவுடன் சாவினை தழுவிய வீரர்களை வீரவணக்கம் செலுத்தி மாவீரருக்குரிய மரியாதையுடன் அடக்கம் செய்தல் ஈழப் போராளிகளின் பண்பாடு. மாவீரர் தினம் என்ற ஒன்றை வீர சாவை தழுவிய போராளிகளை மரியாதை செய்யும் நிமித்தமாக போராளிகள் கொண்டாடுகிறார்கள். ஆயுத போராட்டத்தில் உயிர்விட்ட முதல் போராளி சங்கர் உயிர்விட்டது நம் தாயக மண்ணான தமிழகம்தான். அங்கு எழுந்ததே புலிகளின் முதல் வீர வணக்கம்.
19 November 2009
jayalalithaa01இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
19 November 2009
tamil leaders and traitorsஇலங்கையில் சிறுபான்மை மக்களின் எதிர்காலம் குறித்த விடயங்களை ஆராயும் முகமாக இங்கிலாந்தை தளமாக கொண்டுள்ள தமிழர் தகவல் மையம் என்ற அமைப்பு கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
19 November 2009
Sri_Lanka_Army_Logoதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு தகவல்களை வழங்கியதாக ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஒருவரை சிறீலங்கா புலனாய்வுப் பரிவினர் கைது செய்துள்ளனர்.
19 November 2009
OXFORDMS[படங்கள்] சிறீலங்காவின் தயாரிப்புகள் அனைத்தையும் புறக்கணிக்கும்படி மனித உரிமைகள் குழு பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.
19 November 2009
sivanathan_mahindaதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
19 November 2009
prisonதமிழ்ப் பிரதேசங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம் பகுதிகளில் புதிய சிறைச்சாலைகளைக் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி சில்வா கூறியுள்ளார்.
19 November 2009
Amnesty Logo - Global Identityஇலங்கையில் அரசினால் நடத்தப்படும் முகாம்களில் தமிழ் ஏதிலிகள் வகை தொகையின்றித் தொடர்ச்சியாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமையைக் கண்டித்து சர்வதேச மன்னிப்புச்சபை உலகளாவிய ரீதியில் மாபெரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கை ஒன்றை அடுத்துவரும் ஒருவார காலத்துக்குத் தொடர்ச்சியாக நடத்த தீர்மானித்துள்ளது.
19 November 2009
peoples_barbwireசிறிலங்காவில் முப்பது ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துவிட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்து ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் அங்கு இன்னமும் மீள்குடியேற்றப் பணிகள் நிறைவடையவில்லை.
19 November 2009
viking_shipஇந்தோனேஷியாவில் கடலில் தரித்து நிற்கும் "ஓசியானிக் வைகிங்" கப்பலிலிருந்து ஏதிலியர்கள் 78 பேரும் வெளியேறி கரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 November 2009
army_busயாழ்.மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்வதற்கான பயண அனுமதி தேவையில்லை என வடமாகாண ஆளுநர் அறிவித்த நிலையிலும் நேற்று பயணம் மேற்கொள்ளச் சென்ற பயணிகளிடம் படையினர் பாதுகாப்பு அனுமதி கேட்டுத் திருப்பி அனுப்பியதாகத் திரும்பி வந்த மக்கள் பலரும் விசனம் தெரிவித்தனர்.
19 November 2009
mahinda_kotaஇலங்கை அரசை இயக்கிக் கொண்டிருக்கும் ராஜபக்ஷ சகோதர நிறுவனத்தின் அரசியல் கட்டமைப்பின் கண்ணோட்டமாக அமைக்கிறது. இக்கட்டுரை "லக்ருவணி மெதகம" என் பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை கடந்த 8ஆம் திகதிய "இருதின" பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.அதன் தமிழ் வடிவமே இது.
19 November 2009
peoples_shoutingதாய் மொழி, தாயக மண், மூதாதையரின் வரலாறு-இம் மூன்றின் பதிப்பாகிய இன அடையாளங்கள் போன்றவை உயிரோடு ஒட்டியவை. இந்த உண்மையை – பொதுவுடைமை சீன அரசு உணர மறுத்து வருவதாலேயே, திபெத் பிரச்சினை அந்நாட்டுக்கு மிகப்பெரிய களங்கமாக சர்வதேச அரங்கில் நீடித்து வருகிறது.
19 November 2009
eelanaadu_logo_sமுள்ளிவாய்க்கால் பேரழிவில் ஈழத் தமிழர்கள் தமது படைபலத்தை மட்டும் இழக்கவில்லை, தமது அரசியல் பலத்தையும் சேர்த்தே இழந்துள்ளார்கள் என்பது தற்போதைய கூட்டமைப்பு உறுப்பினர்களின் கதகளி நடனத்தினால் உணர்த்தப்பட்டு வருகின்றது.
19 November 2009
sidmparam'நாம்' மற்றும்  'போருக்கு எதிரான பத்திரிக்கையாளர்கள் அமைப்பு' என்ற பெயருடன் பல்வேறு பிரபலங்களின் கவிதை தொகுப்பினை ஈழம் மவுனத்தின் வலி என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. ஜாக்கிவாசுதேவ் என்னும் சாமியாரும், பாதிரியார் கஸ்பார் அவர்களும் முன்னின்று நடத்திய இந்த புத்தகவெளியீடு பல்வேறு விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.
18 November 2009
leaders familyதமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட ஆல்பம், சில புகைப்படங்கள் உட்பட சில சீருடைகள் மற்றும் சில செய்மதி தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  சிறீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று தெரிவித்துள்ளனர்.
18 November 2009
tna-logoஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.
18 November 2009


மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக