வெள்ளி, 20 நவம்பர், 2009

தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி பாலியல் கொடுமை செய்த சிங்கள கடற்படை

 தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி பாலியல் கொடுமை செய்த சிங்கள கடற்படை



attacked fishermen[படம்] தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி சிறீலங்கா கடற்படையினர், கடந்த புதன் கிழமை இரவு முழுவதும் பாலியல் கொடுமை செய்து விரட்டியடித்தனர்.

20 November 2009

[விரிவு]  

திஸ்ஸநாயகம் பிணை மனு வழக்கு திங்கட்கிழமைக்கு தள்ளிவைப்பு
tissainayagamதமிழ் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடானது நிலுவையில் உள்ள இச்சமயத்தில் அவரைப் பிணையில் விடுவிக்கவேண்டும் என வழங்கிய மனுவை மேல்நீதிமன்றம் வருகின்ற திங்கட்கிழமை விசாரணைக்கு எடுப்பதாக தள்ளிவைத்துள்ளது.
20 November 2009
Mangala_Samaraweeraஅப்பாவித் தமிழ் மக்களை முள்ளுக் கம்பிகளுக்குள் அடைத்து வைத்துள்ள ஜனாதிபதி, தமிழ் குழந்தைகளை கண்டால் வாரியணைத்து முத்தம் கொடுக்காமல் விடமாட்டார். இவ்வாறு நடந்துகொள்வதில் வெட்கமில்லையா? என்று ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தரான மங்கள சமரவீர எம். பி. தெரிவித்தார்.
20 November 2009
Medicinesஇந்தியாவிலுள்ள நான்கு மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்திகளை சிறீலங்காவுக்கு இறக்குமதி செய்வதை சிறீலங்கா அரசாங்கம் தடை செய்துள்ளதோடு அவற்றின் உற்பத்திகள் யாவும் சிறீலங்கா அரசாங்க மருத்துவமனைகளின் பாவனையிலிருந்து நீக்கப்பட்டு, அவற்றை தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்று அறிவித்துள்ளார்.
20 November 2009
europe_flagசிறீலங்காவுக்கு எதிர்வரும் 2010ம் ஆண்டு நடுப்பகுதி வரையில் ஜீ எஸ் பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படலாம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
20 November 2009
smkrishnaசிறீலங்கா சிறைகளில் இருந்து சுமார் 40க்கும் அதிகமான இந்திய கைதிகளை மீட்பதற்காக சிறீலங்கா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
20 November 2009
viking_shipஅவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு எதிராக, பெண்களையும், சிறுவர்களையும் நடமாட முடியாதபடி தற்காலிக தடுப்பு அறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்த பெண்களில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
20 November 2009
mp_sivasakthianandanஇராணுவத்தினரின் வழிகாட்டுதலுடனான பயணம் என்பதால் இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களுக்குச் செல்வதற்கான அழைப்பைத் தான் நிராகரித்துவிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
20 November 2009
death_certificateவன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் சிக்கி உயிரிழந்த மக்களின் மரணச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு மக்கள் பிரதேச செயலகங்களுக்கும், பதிவாளர் அலுவலகத்துக்கும் அலைந்து திரிகின்றனர். இதனால் அவர்கள் வீண் சிரமங்களுக்கு உள்ளாவதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.
20 November 2009
sarath-ponseke_sசரத் பொன்சேகாவை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறுமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளதால், மிகக் குறுகிய காலத்தில் பொருத்தமான வீடொன்றைப் பெறுவதில் அவர் பலத்த சிரமத்தை எதிர் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
20 November 2009
n-19112009-onray eluvam-02s1945ல் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்கு வந்த வேளையில் பிரித்தானிய மக்கள் ஒரு மிகப் புத்திசாலித்தனமான முடிவை எடுத்தனர். போர்மந்திரி வின்ஸ்டன் சேர்ச்சில் (Winston churchil) அவர்களை அரசியலிலிருந்து ஓய்வு நிலைக்கு அனுப்பிவிட்டு கிளெமன்ட் அட்லீயை (Clemnt Attee) பிரதமராகத் தேர்ந்தெடுத்தனர்.
20 November 2009
uthayan_logoஇலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைத்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நேற்று முதல் மூன்று நாள்களுக்கு சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் உயர் மட்டக் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படுவதாகத் தெரி விக்கும் செய்திகள் இப்போது வெளியாகியுள்ளன.
20 November 2009
anoma_fonsekaமுன்னாள் சிறீலங்காப் படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத்பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா சிறீலங்கா இராணுவத்தின் ரணவிரு சேவா அதிகார சபைத் தலைவர் பொறுப்பிலிருந்து நேற்று வியாழக்கிழமை பதவி விலகியுள்ளதாக சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
20 November 2009
john holmesயுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விட்டதாக அரசு கூறினாலும் வடக்கு கிழக்கு உட்பட சிறீலங்காவில் எங்குமே தமிழர்கள் சுதந்திரமாக  அச்சமின்றி நடமாடக்கூடிய நிலைமை இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
20 November 2009
vaiko1தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான்.
20 November 2009
norway-flagஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுகிறார்கள் என நம்பப்பட்டு வந்த நோர்வே இப்போது தமிழர்களை அவமானப்படுத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.
19 November 2009
barbwire_peoplesவீழ்ந்துகிடக்கும் பெருங்கனவாகக் கண் முன்னால் கிடக்கிறது வன்னிப் பெருநிலம். தமிழீழ நிலப்பரப்பு சூனியத்தால் சூழப்பட்டு இருக்கிறது. முள்வேலி முகாம்களுக்குள் மக்கள் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் சூழலில் இலங்கை முகாம் ஒன்றில் இருந்து தமிழகம் வந்திருக்கும் சிலரைச் சந்திக்க முடிந்தது. அவர்கள் சொல்லும் உண்மையின் வார்த்தைகள் இவை…
19 November 2009
landmine_removalமன்னார் பிரதேசத்தில் மாந்தை மேற்கு பகுதியில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர், தற்செயலாக கண்ணி வெடி வெடித்ததில் காயமடைந்து, மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
19 November 2009
mahinda_sarat'போரில் தோற்றவர்களைவிட வென்றவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்' என்பது புத்தனின் வாக்கு! தனது வலது பக்கத்தில் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவையும் இடது பக்கத்தில் பாதுகாப்புத் துறைச் செயலாளரும் தனது தம்பியுமான கோத்தபயவையும் வைத்துக்கொண்டு, ஈழத்தில் இரக்கமற்ற ரத்தக் கொடுமையை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே நடத்தி முடித்துவிட்டார்.
19 November 2009
salute_muththukkumarஈழத்தமிழனுக்கு மிகவும் பரிச்சயமான வார்த்தை 'வீர வணக்கம்'. ஈழத்தில் வீர மரணம் அதிகம். தாயககனவுடன் சாவினை தழுவிய வீரர்களை வீரவணக்கம் செலுத்தி மாவீரருக்குரிய மரியாதையுடன் அடக்கம் செய்தல் ஈழப் போராளிகளின் பண்பாடு. மாவீரர் தினம் என்ற ஒன்றை வீர சாவை தழுவிய போராளிகளை மரியாதை செய்யும் நிமித்தமாக போராளிகள் கொண்டாடுகிறார்கள். ஆயுத போராட்டத்தில் உயிர்விட்ட முதல் போராளி சங்கர் உயிர்விட்டது நம் தாயக மண்ணான தமிழகம்தான். அங்கு எழுந்ததே புலிகளின் முதல் வீர வணக்கம்.
19 November 2009
jayalalithaa01இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
19 November 2009


--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக