செவ்வாய், 12 ஜனவரி, 2010

பேராதனைப் பல்கலைக்கழக மாணவி துவாரகாவை விடுதலை செய்க – அனைத்துப் பல்கலை மாணவர் ஒன்றியம் வற்புறுத்து

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பேராதனைப் பல்கலைக்கழக மாணவி துவாரகாவை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரத்தன  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
12 January 2010
"சண்டேலீடர்" பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு ஜனவரி 8ஆம் திகதி யுடன் ஓராண்டு பூர்த்தியாகி விட்டது. 23வழக்குத் தவணைகளும் வந்து போய்விட்டன. ஆனால் பிரதான சந்தேக நபர் என்று எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
12 January 2010
"கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதம் தற்போது இல்லை. எனினும் மீண்டும் ஆயுதக் கலாசாரம் தலைதூக்காது மக்கள் செயல்பட வேண்டும்" என்று நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மகிந்த ராசபக்ச கேட்டுக் கொண்டார்.
மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சுமார் 12 நிமிடங்கள் தமிழிலும், சிங்களத்திலும் இவர் உரையாற்றினார். மக்கள் பிரச்சினை சம்மந்தமாகவோ அரசியல் தொடர்பாகவோ எதுவும் பேசாத மகிந்த பொதுவாக உரையாற்றினார்.
குறிப்பாக யுத்தத்தினால் குடும்பங்களைப் பிரிந்து வாழ்பவர்களையும், யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்ட பெண்களையும் சமூகமயமாக்கும் பொருட்டு விசேட வேலைத் திட்டமொன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டுமே அவர் தெரிவித்தார்.
கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதம் தற்போது இல்லை என்று தனது உரையில் குறிப்பிட்ட மகிந்த நாட்டில் மீண்டும் ஆயுதக் கலாசாரம் தலைதூக்காது மக்கள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஒட்டுக்குழுக்களின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன்,
கிழக்கு மாகாண சபை செயல்படுவதில் தற்போது நிர்வாக ரீதியான பிரச்சினைகள் எதிர்நோக்குவதால் எதிர்வரும் பதவிக் காலத்தில் அப்படியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சிறிலங்காவின் அமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளீதரன், ஏ.எல். அதாவுல்லா, எஸ்.எச்.அமீர் அலி உட்பட பலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதன் பின் காத்தான்குடிக்கு விஜயம் செய்த மகிந்த அங்கு பள்ளிவாசல் ஒன்றுக்கான வேலைகளையும் ஆரம்பித்து வைத்தார்.  தமிழினத்துக்கு துரோகம் செய்த ஒட்டுக்குழுக்களின் தலைவர்கள் மகிந்தவிற்கு அருகில் இருந்து எம்மை அழித்தது மட்டுமல்லாது அதை கைதட்டி சிரித்து மகிழ்வதாகவும் இந்நிகழ்ச்சியின் மூலம் தென்படுகிறது.
11 January 2010
சிறிலங்கா அரச படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை விடுதலை செய்ய முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
11 January 2010
சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்காக விநியோகிக்கப்பட்டு வரும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் பல்வேறு குறைபாடுகள் தென்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு விநியோகிக்கப்பட்டுள்ள வாக்காளர் அட்டைகளில் தேசிய அடையாள அட்டை இலக்கம்
11 January 2010
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு பிணை வழங்குவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. 50ஆயிரம் ரொக்கம் மற்றும் அவரது கடவுச்சீட்டு ஆகியவற்றை பிணையாக வைக்கவேண்டும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
11 January 2010
சுதந்திரத்திரமான வாழ்வுக்காக முன்னெடுக்கப்பட்ட தமிழர்களின் போராட்டத்திற்கு தற்காலிக பின்னடைவே ஏற்பட்டுள்ளது. உரிய தீர்வுகள் தமிழர்களுக்கு முன்வைக்கப்படாவிட்டால் மீண்டும் விடுதலைப் போராட்டம் தன்னெழுச்சியாக உருவாகுமென அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் பேச்சாளர் சாம்பவி தெரிவித்துள்ளார்.
11 January 2010
தேர்தல் வெற்றியை ஈட்டுவதற்காகக் கண்மண் தெரியாமல் வாக்குறுதிகளையும்,  நம்பிக்கை அறிவிப் புகளையும் அள்ளிவீசி வரும்  அரசியல் தலைமைத்து வங்களுக்கு  ஆட்சி, அதிகாரத் தரப்புகளுக்கு  "சந்தேகம்" என்ற பெயரில் நீண்டகாலம் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அவலப்பட்டு, வாழ்வைத் தொலைத்து நிற்கும் சுமார் இரண்டாயிரம் தமிழ்க் கைதிகளின் துயர நிலைமை கண்ணுக்குப்படாமல் இருப்பது பெருவிசனத்துக்குரி யது.
11 January 2010
ஜனாதிபதித் தேர்தலில் போட்டி யிடும் இரு பிரதான பிரமுகர்களதும் பொதுவான பிரசார விடயமாக முதலில் காணப்பட்டது ராணுவ ரீதியில் புலிகள் அமைப்பைத் தோல்வியடையச் செய் தமைதான். போர் வெற்றியை அடுத்து இருவருமே தேசியமட்டத்தில் புகழின் உயர்ந்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்கள்.
11 January 2010
ஏ-9 வீதியில் அனுமதிப்பத்திரம் இல்லாத தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.இந்த பேரூந்து சேவைகளில் பொதுமக்களிடமிருந்து அதிக கட்டணம் அறவிடுவதாக அச்சங்கத்தினர் தலைவர் குறிப்பிடுகின்றார்.
11 January 2010
[படங்கள்] தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு 10-01-2010 மாலை 2:30 மணியளவில் Croydon Lanc France மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
11 January 2010
தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் சுகயீனம் காரணமாக வல்வெட்டி ஊறணி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
10 January 2010
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையான திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகளின் பின்னர் அஞ்சலி உரையாற்றிய இடதுசாரி முன்னணியின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 January 2010
சிறிலங்காவில் போலி நாணயத்தாள்களை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கடந்த ஆண்டில் 1000 ரூபா மற்றும் 2000 ரூபா போலி நாணயத்தாள்கள் 940 கண்டு பிடிக்கப்பட்டதாக காவல்துறையின் இரகசியப்
10 January 2010
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் உண்ணாநிலை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்களில் 19பேர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10 January 2010
கொழும்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் அவர்களின் நினைவாக நினைவு மண்டபம் ஒன்று நல்லூர் வடக்கு வீதியில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
10 January 2010
தமிழீழ தேசியத் தலைவரின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதிநிகழ்வில் பங்கேற்பதற்காக, மூன்று இரத்த உறவுகளுக்கு பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்வதாக மகிந்த ராசபக்ச,
10 January 2010

ஒரு வரலாற்றின்
இரத்தம் பாய்ச்சி -
உயிர் தந்த கோடியே;
10 January 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக