
"இந்து சமுத்திரத்தின் முத்து" என வர்ணிக்கப்படும் இலங்கைத்தீவு இரத்தக் குழம்பில் முழ்கியிருப்பதற்கான காரணங்களை ஆழமாக ஆராய்ந்து, அறிய வேண்டியது அவசியம். தெற்கு, தென் கிழக்காசியாவில் மிகவும் பலம் பொருந்திய இடதுசாரி அரசியல் தோன்றி உருப்பெற்ற நாடு இலங்கைத் தீவாகும். ஆனால் அங்கே அந்த இடதுசாரி இயக்கங்கள் முற்றிலும் படு தோல்வி அடைந்துள்ளன. இனப்பிரச்சினையைப் கையாள்வதில் அவர்கள் கைக் கொண்ட நிலைபாடுகள் வரலாற்று வளர்ச்சிக்கு எதிர்க்கணியமாய் அமைந்து விட்டன. இத்தகைய நிலை எவ்வாறு ஏற்பட்டது என் பதை இங்கு நாம் ஆராய வேண்டியது அவசியமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக