புதன், 18 நவம்பர், 2009

ஈழத்தமிழர்களின் வேதனை

Cambidவவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் மகபேறுக்கான போதிய சுகாதார வசதிகள் இன்மையால் கடந்த மாதத்திற்குள் 41 குழந்தைகள் இறந்துள்ளன. இதனை தவிர போதுமான மருத்துவ வசதிகள் இன்றி, தினமும் வயோதிபர்கள் பலர் உயிரிழந்து வருவதாக தெரியவந்துள்ளது. விரிவு… »


பிரதான செய்திகள்

sarathகார்டிஹேவா சரத் சந்திரலால் ஃபொன்சேகா… இதுதான் இலங்கையில் புயலைக் கிளப்பி இருக்கும் ஃபொன்சேகாவின் முழுப்பெயர். அம்பலங்கொடை தர்மாசோக்க கல்லூரியிலும், கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் படித்த அவர், விளையாட்டு வீரராகவும் விளங்கியவர். 1970-ம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் சேர்ந்தவர், 1995-ம் ஆண்டு ஹிட்லரையே மிஞ்சுகிற அளவுக்கு அரக்கத்தனமான கொடூரம் ஒன்றை அரங்கேற்றினார்.
18 November 2009
sarath_mahindaதமிழகத்திலிருந்து வெளிவரும் விகடன் சஞ்சிகையில் வெளிவந்த "பொன்சேகா அதிரடி அரசியல் வாக்குமூலம்" கட்டுரை மீனகம் வாசகர்களுக்காக…
18 November 2009
karuna-karunaமுள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் சிங்களப் படையினால் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட போது தில்லியில் முகாமிட்டு மகன், மகள்,பேரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க தவம் கிடந்த கருணாநிதி இப்போதுதான் விடுதலைப்புலிகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டித் தான் மெளனமாக  அழுவதாகப் புலம்புகிறார்.
18 November 2009
lanka_1000_rs_2[படங்கள்] சிங்களவர்களால் தமிழர்கள் அடிமை கொள்ளப்பட்டதை நினைவுகூரும் முகமாக சிறீலங்கா மத்திய வங்கியினால் புதிய 1000 ரூபா தாள் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
17 November 2009


ஏனைய செய்திகள்

sidmparam'நாம்' மற்றும்  'போருக்கு எதிரான பத்திரிக்கையாளர்கள் அமைப்பு' என்ற பெயருடன் பல்வேறு பிரபலங்களின் கவிதை தொகுப்பினை ஈழம் மவுனத்தின் வலி என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. ஜாக்கிவாசுதேவ் என்னும் சாமியாரும், பாதிரியார் கஸ்பார் அவர்களும் முன்னின்று நடத்திய இந்த புத்தகவெளியீடு பல்வேறு விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.
18 November 2009
leaders familyதமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட ஆல்பம், சில புகைப்படங்கள் உட்பட சில சீருடைகள் மற்றும் சில செய்மதி தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  சிறீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று தெரிவித்துள்ளனர்.
18 November 2009
tna-logoஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.
18 November 2009
flag_denmarkஐக்கிய நாடுகள் சபையின் தட்பவெப்பநிலை மாறுபாட்டின் மாநாட்டில் இலங்கை அரசினால் கொல்லப்பட்ட ஈழமக்களின் மனிதபேரவலங்களும் ஈழத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடுகளும் அடங்கிய புகைப்படக் கண்காட்சி தமிழ்மக்களிற்கான மாநாடு மற்றும் ஆர்பாட்டம்.
18 November 2009
eelam_flag01நாங்கள் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமை குறித்து கடுமையாக தெரிவித்துவருவதன் காரணம் இன்று தமிழினத்துக்கு சார்பாக சர்வதேசத்தில் உருவாகிவரும் சூழலை நாம் பிரிந்து நிற்பதனால் இல்லாமல் செய்துவிடும் என்ற அச்சத்தினாலாகும்.
18 November 2009
nedumaaran2009தன் தவறை மறைக்க அவதூறு செய்கிறார். விடுதலைப் புலிகள் மீது முற்றிலும் உண்மையல்லாத குற்றச்சாட்டுக்களைக் கருணாநிதி தெரிவித்துள்ளார் என பழ.நெடுமாறன்  அவர்கள் கூறியுள்ளார்.
18 November 2009
sri lanka electionஇலங்கையில் நடைபெறவுள்ள பாரிய தேர்தல்களின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 November 2009
karunaமு.கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "இலங்கையில் விடுதலைப் புலிகள் எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆகின என்று எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப்போகிறது"என்று கூறியிருக்கிறார். பிஞ்சு குழந்தைகள் தலை,கால், கை என அங்கங்கள் சிதறுண்டு முடங்களாக கிடக்கும்போது,…
18 November 2009
leaderதனது படைகளையோ மக்களையோ இறுதிவரை விட்டுச் செல்லாத பிரபாகரனிடமிருந்து நாட்டை விட்டுத்தப்பியோடியவரான சோமவன்ச அமர சிங்க பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மீள் குடியேற்ற அமைச்சுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹேம குமார நாணயக்கார நேற்று தெரிவித்துள்ளார்.
18 November 2009
nedumaaran2009ஈழத்தில் மறைந்த தமிழர்களுக்காக தியாக தீபங்களை எதிர்வரும் 27ம் நாள் ஏற்றுவீர் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழ.நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 November 2009
jvpflag_thumbnailபேராதனை பல்கலைக்கழக கலைப்பீட தமிழ் மாணவியின் கைது தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜே.வி.பி, பிரபாகரனிடம் சான்றிதழ் பெற்றதற்காக அந்த மாணவி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளாரென்றால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தங்கப்பதக்கம் பெற்றதற்காகவும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியது.
18 November 2009
tna-logoவன்னியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள ஏதிலிகளின் குடும்பத் தலைவர்கள் பலர் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறப்படுபவர்களால் கைது செய்யப்பட்டுக் கொண்டு வருகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டியது.
18 November 2009
Washington_post_logoஇலங்கையின் அரசியலில் எதிரணியைச் சேர்ந்த சோதிடரின் உயிருக்குக்கூட உத்தரவாதம் கிடையாது என்று உலகின் முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்றான "வாஷிங்ரன் போஸ்ற்" நேற்று செய்தி வெளியிட்டது.
18 November 2009
police attack001அனுராதபுர சிறைச்சாலையில் அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல் சம்பவத்தில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
18 November 2009
france-flagபிரான்சின் நாடாளுமன்ற சதுக்கத்தை அண்டிய பகுதியில் புதன் கிழமை(18.11.2009) பி. பகல் இரண்டு மணியளவில் நீதிக்கான ஒன்று கூடல் நடைபெறவுள்ளது.
18 November 2009
MIDEAST ISRAEL PALESTINIANS POPEநாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்கு பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
18 November 2009
vad1sஎதிர்வரும் டிசெம்பர் 12,13ம் திகதிகளில் பிரான்சு தழுவிய ரீதியில் 1977ல் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் வடக்கு,கிழக்கு வாழ் தமிழ்மக்கள் ஐனநாயக வழியில்  தேர்தல் மூலம் வழங்கிய அங்கீகரத்தை  மீண்டும் 2010 ல் தமிழ் மக்கள் வழங்குவதற்கா ஒரு களமாக டிசெம்பர் 12, 13 திகதிகள் அமையப்பேகின்றன.
18 November 2009
sl_police0134வவுனியா பிரதேசத்தில் பல்வேறு படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரைக் கொண்ட கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
18 November 2009
நாடு முழுவதிலும் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான அரசியல் கைதிகள் நேற்றுமுன்தினம் ஒருநாள் அடை யாள உண்ணாவிரதம் இருந்திருக்கின்றார்கள்.
18 November 2009
ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என்றும் அதனை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் இன்று முன்னிரவு வெளியான தகவல்கள்  தெரிவித்தன.


--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக